வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

இராசீவ்காந்தியின் வழியில் சோனியா

இந்திய அரசு சிங்கள அரசோடு கூடிக் குலவிக் கொண்டு அங்கு போராடும் மக்களைக் கொன்றொழிப்பது புதிதன்று. மலையக மக்களை சாத்திரி காலத்தில் நாடற்றவர்கள் ஆக்கியது. பின்னர் வந்த இந்திரா அங்கு தம் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்த சிங்கள உழைக்கும் மக்களின் அமைப்பாக இருந்த சனதா விமுக்த பெரமுன என்ற அமைப்பை (இன்றைய சனதா விமுக்த அமைப்பின் கொள்கையே வேறு) இந்தியப் படையை அனுப்பி முற்ற முழுதாக அழித்தார். அவர் மகன் இராசீவ்காந்தியோ ஈழவிடுதலைப் போரின் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளை அழிக்க நினைத்து தாமழிந்து போனார்.

இந்திராவின் மருமகளும், இராசீவின் மனைவியும், போபர்சு குற்றவாளியான குவரோச்சியின் உறவினருமான சோனியா இராசீவின் வழியில் இன்று படையினரையும் படைக்கருவிகளையும் சிங்கள அரசுக்குத் தாராளமாக அளித்து வருகிறார். 87இல் தமிழகத் தெருக்களில் அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பப்பட்ட அமளிப் படையின் நடமாட்டத்தைக் கண்டு தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். முகஞ்சுளித்தனர்.

இன்று அந்தக் காட்சிகள் மீண்டும் அரங்கேறத் தொடங்கி உள்ளது. இந்தியப் படையின் பீரங்கிகள் (இவற்றை இந்தியர்கள் குடியரசு நாள் அணிவகுப்பின் போது மட்டுமே பார்ப்பர்.) ஈரோடை வழியாகச் கொச்சி சென்று அங்கிருந்து சிங்களனின் கைக்குப் போய் சேர்ந்துள்ளன. அணியணியாக அந்நிகழ்வு இனி தொடரும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும் போர்க்களத்தில் அந்த பீரங்கிகள் வெடிக்குமா என்று தெரியாது. சோனியா அம்மையார் அனுப்புகின்ற பீரங்கி அல்லவா? எவ்வளவு கையூட்டில் வாங்கியதோ? அந்த பீரங்கிகள் வெடிக்கின்றவோ இல்லையோ நாளை ஈழப் போர்க்களத்தில் தோல்வியைத் தழுவும் போது பழியை இந்த பீரங்கிகள் மீதுதான் சிங்கள அரசு போடப் போகிறது.

ஏற்கனவே புலிகளின் போர் வானூர்தியைக் கண்டறிய வக்கற்ற சிங்களம் இந்தியா கொடுத்த இரேடார் தரம் குறந்தது; அதனால்தான் கண்டறிய முடியவில்லை என்று சொன்னது அல்லவா? அதுபோலவே இப்பொழுதும் நடக்கும். சோனியா அம்மணி அவர் கணவர் வழியில் நடையிடுவதை யார்தான் தடுக்க முடியும். அப்படி நடையிடும் போது ஏற்படும் பழிகளும் அவர்களையே சாரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக