ஞாயிறு, 7 ஜூன், 2009

தமிழிசை நினைவேந்தல்


தமிழர் கழகத்தின் உறுப்பினரும் கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சிப் பொறுப்பாளர் திருவாளர் மா.செ. தமிழ்மணி ஐயா அவர்களின் புதல்வியுமான தோழர் தமிழிசை தி.பி. 2038 விடைத்திங்கள் 31 ஆம் நாள் (14.6.2007) மறைவுற்றார்கள். அவர்களின் இரண்டாமாண்டு நினைவுநாள் எதிர்வரும் விடைத்திங்கள் (வைகாசி) 31ஆம் நாள் (14.6.2009) அன்று காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், சேயாறு வட்டம், மாத்தூர் மங்கலபுரத்தில் நடைபெற உள்ளது. நிகழ்வில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வியல் முப்பது நூல் வெளியிடப் பெறுகின்றது.